இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு படகுகளுடன் 11 இலங்கை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம், கலிங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து 175 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்தியக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காக்கிநாடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.