செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்வியங்காட்டில் இரண்டு மாதக் குழந்தை பரிதாபச் சாவு!

கல்வியங்காட்டில் இரண்டு மாதக் குழந்தை பரிதாபச் சாவு!

0 minutes read

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு சளி ஏற்பட்ட நிலையில் கோப்பாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்நிலையில், குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி விட்டு தூங்கவைத்தனர். குழந்தை அசைவற்ற நிலையில் காணப்பட்டதால் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என்று மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு தொடர்பில் நேற்று மாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More