செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருள் கடத்தல்: முக்கிய புள்ளி ‘டிஸ் கோ’ கைது!

போதைப்பொருள் கடத்தல்: முக்கிய புள்ளி ‘டிஸ் கோ’ கைது!

1 minutes read

‘டிஸ் கோ’ என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தற்போது பிரான்ஸில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ரூபன்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பெண் நேற்று கொழும்பு 15, டெம்பிள் வீதி, மோதரையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More