செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசை மீறி தேர்தல் நடத்த ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை! – மனோ சீற்றம்

அரசை மீறி தேர்தல் நடத்த ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை! – மனோ சீற்றம்

1 minutes read

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்தச் செய்தியை தான் நான் புரிந்துகொண்டேன் என்றும் மனோ எம்.பி. கூறினார்.

“அரசை மீறி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை.

தேர்தல் நடத்த அரசு விடாது. ஆகவே, தேர்தல் இடம்பெற வேண்டுமானால், அனைத்துக் கட்சியினரும் தெருக்களில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டும். வேறு மாற்று வழியில்லை” – என்று மனோ எம்.பி. மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More