செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் இரத்தாகுமா? – முடிவில்லை என்கிறார் ஆணையாளர்

தேர்தல் இரத்தாகுமா? – முடிவில்லை என்கிறார் ஆணையாளர்

0 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குத் தேவையான நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்பட்டால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் தபால் வாக்குச்சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை இரத்துச் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சந்தித்துக் கலந்துரையாட கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More