செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயர்நீதிமன்றை நாடவுள்ளதாக வெடுக்குநாறிமலையில் வீரசேகர தெரிவிப்பு!

உயர்நீதிமன்றை நாடவுள்ளதாக வெடுக்குநாறிமலையில் வீரசேகர தெரிவிப்பு!

0 minutes read

வவுனியா, வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் சரத் வீரசேகர எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை சென்றனர்.

மலையின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட அவர் மலையில் சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆலயத்தில் இன்று இந்து சமயப்பேரவையின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றமையால் ஆலய நிர்வாகத்தினரும் அங்கு கூடியிருந்தனர்.

இதன்போது பிரதான காட்டுப் பாதையூடாக ஆலயத்துக்கு வருகை தருவோர் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உள்வர வேண்டாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மழை காரணமாக ஆலய வளாகத்தில் போடப்பட்ட தற்காலிக கொட்டகையையும் உடன் அகற்றுமாறும் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More