செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் குழப்பத்துக்கு வெளியானது காரணம்!

கொழும்பில் குழப்பத்துக்கு வெளியானது காரணம்!

1 minutes read

கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்றுகூடலுக்காக 2 ஆயிரம் உணவுப் பொதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதைத் தவறாகப் புரிந்துகொண்டமையே கொழும்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமைக்குக் காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெறவுள்ளார் என்றும், அதற்காகவே கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றுகூடலுக்காக 2 ஆயிரம் உணவுப் பொதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதைத் தவறாகப் புரிந்து கொண்டதே கொழும்பில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைகழகம், காலிமுகத்திடல், தும்முல்லை சந்தி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிஸார், ஆயுதம் ஏந்திய இராணுவம், விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர். உளவுத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வார இறுதியில் கொழும்பு நகரில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டு, அரச நிறுவனங்களைக் கையகப்படுத்தி, புதிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதில் 750 பேர் வரையில் பங்கேற்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

கொழும்புப் பல்கலைகழக பழைய மாணவர் தரப்பினர், 2 ஆயிரம் உணவுப் பொதிக்கு முன்பதிவு செய்திருந்த தகவலை உளவுத்துறை பெற்றதைத் தொடர்ந்தே, இந்தப் புலனாய்வுத் தகவல் வெளியிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பழைய மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றதாகவும், அதற்காகவே இந்த உணவுப் பொதிகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், அதனைப் போராட்ட முன்னேற்பாடு எனப் பாதுகாப்புத் தரப்பு நினைத்து விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேல்மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வுப் பிரிவே இந்தத் தகவலை வழங்கியதாகவும், அதனடிப்படையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அடிப்படையற்ற புலனாய்வுத் தகவல்களால் பாதுகாப்புத் தரப்பினரை அலைக்கழித்தமை உட்பட்ட பல விடயங்களால் ஜனாதிபதி கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More