செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை!

கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை!

0 minutes read

கொழும்பு, பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று காலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைப் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 53 வயதுடைய குடும்பஸ்தர் எனவும், களனிப் பகுதியில் வசிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளைத் தேடும் பணியைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More