செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வயிற்றில் இருந்த 3 குழந்தைகளுடன் கர்ப்பிணித் தாய் சாவு!

வயிற்றில் இருந்த 3 குழந்தைகளுடன் கர்ப்பிணித் தாய் சாவு!

1 minutes read

கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவரது கணவர் அமில சமரவீர மேலும் தெரிவித்ததாவது:-

“எனது மனைவி குழந்தை கருத்தரித்ததால் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார். கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டார்.

30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளேன்.” – என்றார்.

தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்துத் தெரிவிக்கையில்,

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை பொறுப்பல்ல.

உயிரிழந்த பெண்ணுக்குப் பல வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் குழாய் மூலம் பிரசவத்துக்காகக் கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல இலட்சம் ரூபா செலவழித்துச் செய்கின்றன.

இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகின்றார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகின்றது.

எனினும், இந்தத் தாய்க்கு மூன்று கருமுட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தத் தாயையும் அவரது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர். எனினும், அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More