செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை ஒத்திவைத்தல் அடிப்படை உரிமை மீறல்! – ஐ.நா. பிரதிநிதியிடம் சஜித் சுட்டிக்காட்டு

தேர்தலை ஒத்திவைத்தல் அடிப்படை உரிமை மீறல்! – ஐ.நா. பிரதிநிதியிடம் சஜித் சுட்டிக்காட்டு

1 minutes read

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமிர்த்தமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் பல கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன.

நாட்டில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்குத் தெரியப்படுத்தினார்.

அவ்வாறே, தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More