செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

1 minutes read

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகப்படியாக மொஹம்மட் ரிஸ்வான் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் மதீஷ பத்திரன 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 15 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் அதிகப் படியாக குசல் மெண்டிஸ் 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் இப்திகார் அஹமட் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி, இந்திய அணியுடன் இலங்கை அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More