செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

0 minutes read

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (17) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்தனர். இதன்போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் நீண்ட நேரம் கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

இந்த உரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எல்டோஸ் மத்யூவும் கலந்துகொண்டார்.

அதேவேளை ஜே.வி.பியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் என்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More