செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வங்கி அட்டையை திருடி மதுபானம் வாங்கியவர் கைது

வங்கி அட்டையை திருடி மதுபானம் வாங்கியவர் கைது

0 minutes read

கம்பஹா – வத்துபிட்டிவலை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் பாதுகாப்பு பெட்டியிலிருந்து  வங்கி அட்டையை திருடியவர் நேற்று வியாழக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.

நிட்டம்புவ பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் இவர் வங்கி அட்டையை பயன்படுத்தி நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்திலிருந்து மூன்று மதுபான போத்தல்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More