ராகம – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (14) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 17 வயதுடைய இளைஞரும், பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.