செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு

கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு

1 minutes read

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்று (23) மாலை கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இந்தத் திருவிழாவில் இலங்கையில் இருந்து 4 ஆயிரம் வரையான பக்தர்கள் பங்கேற்றனர். இந்தியப் பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரம், இலங்கைக் கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, கடற்படை உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் , பொலிஸ் உயர் அதிகாரிகள், மதகுருமார்கள், பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்தத் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More