செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நான்கு மாத ஆண் குழந்தை பரிதாப மரணம்!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை பரிதாப மரணம்!

0 minutes read

சளி காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

யாழ். தென்மராட்சி, மாசேரி, வரணிப் பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இரட்டைக் குழந்தைகள் சளி ஏற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டன.

அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More