செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

1 minutes read
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற உப்புவெளி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் 2023 ஆம் ஆண்டு நோர்வே  நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து திருகோணமலையில் திருமணம் முடித்தவராவார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வரோதயநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய றினா ஸ்ரீலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More