செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி!

1 minutes read
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் இன்று உயிரிழந்துள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கற்பகபுரம்  பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்துப் படுகாயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் சடலத்தைப் பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More