செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பகிடிவதையால் பல்கலை மாணவன் சாவு: 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பகிடிவதையால் பல்கலை மாணவன் சாவு: 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0 minutes read

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாணவர்களும் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More