செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: அமெரிக்கா கவலை!

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: அமெரிக்கா கவலை!

1 minutes read

வாஷிங்டன்,
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியுள்ளார். முந்தய ஆப்கான் அரசும் இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் மீது சாட்டியது.

தலீபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளிர் காலத்தின்போது, தலீபான் தலைவர்களுக்கு இடமளிப்பது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியது.

தற்போது தலீபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்துவிட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜான் கெர்பி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாகப் பேசித் தீர்க்க விரும்புகிறோம்.

எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்லாது பாகிஸ்தானுக்கும் பாதிப்பு உள்ளது என்பதை அந்நாடு உணர வேண்டும் என்றார்.

ஆப்கானிஸ்தான் மீது டிரோன்களைப் பறக்கவிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தலீபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேவைப்பட்டால் ட்ரோன் தாக்குதல் நடத்துவது தொடரும் என்று ஜான் கிர்பி கூறியிருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More