செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக தகவல்!

இந்தியா வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக தகவல்!

1 minutes read

வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, அம்மாநிலத்தின் புரி, கட்டாக் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், புரி பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுமென அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தையும் நெருங்கக்கூடும் என்பதால் அம்மாநிலத்திலும் திகா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்படுவதாகஅம்மையம் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More