செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை

0 minutes read

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” அனந்த்நாக் சிர்ஹாமா பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி நிசார் தார் கொல்லப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அனந்த்நாத் சிர்ஹாமா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது… இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More