6
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த மீனவர்கள் 14 பேரே நேற்று நள்ளிரவு பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.