ராஜா ராணி திரைப்படத்தை இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா, ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் ராஜா ராணி. அறிமுக இயக்குனர் அட்லீ இயக்கிய இப்படத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. படம், வெளியான முதல் வாரத்திலேயே பல கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அட்லீயும் – ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் மீண்டும் ஒரு புதிய படத்தில் கூட்டணி அமைக்கின்றன. இதனிடையே ராஜா ராணி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. இந்தியில் இப்படத்திற்கு ‘கிங் அன்ட் குயின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இதில் ஆர்யா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், நயன்தாரா நடித்த வேடத்தில் தீபிகா படுகோனேயும் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது. தற்போது பிஸ்டல் என்ற இந்திப் படத்தை எடுத்து வருகிறார். அது முடிந்ததும் கிங் அன்ட் குயின் தொடருமாம்.