கொரோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் இலங்கையில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில்,உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து இதற்கான தீர்வைக் காண இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் தாக்கம் தொடர்பாக கலந்துரையாட நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.