செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘கருடன் பட வெற்றிக்கு தயாரிப்பாளர் மட்டும் தான் காரணம்’ | சசிகுமார்

‘கருடன் பட வெற்றிக்கு தயாரிப்பாளர் மட்டும் தான் காரணம்’ | சசிகுமார்

0 minutes read

சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கிறது.‌

தமிழகம் முழுவதும் இந்தத் திரைப்படம் இந்திய மதிப்பில் தோராயமாக நாற்பது கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தினை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் பங்கு பற்றிய நன்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கு பற்றி தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சசிகுமார் பேசும்போது,

”கருடன் படத்தின் வெற்றிக்கு பலர் பல காரணங்களை சொன்னார்கள்.‌ சூரியின் நடிப்பு… சசிகுமாரின் நடிப்பு.. வில்லனின் நடிப்பு… இயக்குநரின் திரைக்கதை… வெற்றிமாறனின் கதை.. என பல விசயங்களை சொன்னார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவர்தான் காரணம் அது தயாரிப்பாளர் குமார் தான். அவர்தான் இந்தத் திரைப்படத்தை வடிவமைத்தார். ” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More