0

எது சரி
எது தவறென்று
எதுவும் சொல்கிறாற்போலில்லை.
சரியைத்தவறென்று
தவறைச்சரியென்று
நியாயப்படுத்த
பிஞ்சு முதல் பழம்வரை துணிந்தபின்
பேச ஒன்றுமில்லை.
உலர்ந்த இதயங்களோடு சமரசமாய்
வாழநேர்ந்த காலம் ஆலகாலம்.
இப்படியிருக்கவில்லை நம் வாழ்க்கை.
ஏனிப்படி ஆனதென்றும் புரியவில்லை.
விடை தெரியாத வினாக்களோடு
வாழப்பழகிக்கொள்ளவேண்டுமென்று
ஒருவர் மட்டும் சொன்னார்!
.
நன்றி : சொல்வனம்.காம்