சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென கனவின் தலைகீழ் உலகில் தலை இல்லா மனிதனாக இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும் குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக உன்னால் இன்னும் எத்தனை தூரம் தான் போக முடியும் ? நிரம்பி வழியும் இருளை கொஞ்சம் அள்ளிப் பருகு பச்சை மாமிசம் புசிக்கும் மிருகத்தின் பற்கள் கொண்ட திரிகளை வளர விடு அவ்வபோது சுடு நீயாய் சுடர் நீயாய் அணை நித்தம் பொழியும் மழை நிதானமாக அழு ஆமையின் தலையென திரிக்குள் சென்றடங்கு
– ஆமிராபாலன்
நன்றி : சொல்வனம்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW