சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் புரிந்தவர்கள் அரச வேலைகளில் தடைசெய்யப்படுவார்கள் என சத்தீஷ்கார் அரசு அறிவித்துள்ளது.
சத்தீஷ்காரில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
சுதந்திர தினமான நேற்று அவர் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அரசு கல்லூரி மாணவ – மாணவிகளை இலவசமாக கல்லூரிக்கு அழைத்துவர வாகன வசதி செய்யப்படும்.
அரசு பள்ளிகளில் 11, 12 படிக்கும் கிராமப்புற மாணவர்கள், மருத்துவ மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராகும் வகையில் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் புரிந்தவர்கள் அரசு வேலைகளில் தடைசெய்யப்படுவார்கள்.” என்றார்.