செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஐரோப்பாவில் குரங்கம்மை பரவ கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பாவில் குரங்கம்மை பரவ கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

1 minutes read

இந்த வருடத்தில் இதுவரை ஆப்பிரிக்காவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

அத்துடன்,  இதுவரை 524 பேர் பலியாகி உள்ளதுடன்,14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வகை வைரசால் ஏற்பட கூடிய குரங்கம்மை தொற்று நோய் ஆனது, ஆபிரிக்க நாடுகளில் பரவி வருவதுடன், புது வடிவிலான வைரசானது, கொங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த நிலையில், ‘இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்த நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டலத்திற்கான அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வருகிற நாட்களில் மற்றும் வாரங்களில் ஐரோப்பிய பகுதிகளில் கிளாட் 1 பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More