துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த கார், நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் அக்கார் சாரதி உட்பட 6 அகதிகள் உயிரிழந்தனர்.
ஏனையவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி-கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் குறித்த அகதிகள் கார் பயணித்த போது அங்கு பொலிஸாரைக் கண்டுள்ளனர்.
எனவே, பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக வீதியின் மறுபுறமாக காரைத் திருப்பியுள்ளனர். அப்போது திடீரென எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக துருக்கியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும்போது அவர்கள் கடல் அல்லது தரைமார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொள்வதால் பல பயணங்கள் ஆபத்தில் முடிகின்றன.