செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஐரோப்பாவில் ‘நாய் சண்டை’ நடத்திய குழு கைது

ஐரோப்பாவில் ‘நாய் சண்டை’ நடத்திய குழு கைது

0 minutes read

ஐரோப்பா முழுவதும் ‘நாய் சண்டை எனும் போட்டிகளை சட்டவிரோதமாக நடத்த உதவிய நான்கு பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

நாய் சண்டை பந்தயத்தில் “டொக்டர் டெத்” என்று அழைக்கப்படும் பிலிப் அலிக்கு சொந்தமான வீட்டில் நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அந்த முகவரியில் இருந்து அதிகாரிகள் 16 நாய்களைக் கைப்பற்றினர். அத்துடன், நாய் சண்டை பற்றிய புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அயர்லாந்து மற்றும் பிரான்சில் நாய் பந்தய சண்டைகள் இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நாய் சண்டைகளைத் திட்டமிட்டுள்ள வாட்ஸ்அப் குரல் குறிப்புகளை அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.

சட்டவிரோத சண்டைகளில் நாய்கள் அடைந்த காயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத நாய் சண்டை அரங்கில் இருந்து 10 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனைகள் குறைந்தது, ஐந்து வெவ்வேறு நாய்களிடமிருந்து இரத்தம் வந்ததை உறுதிப்படுத்தியது என்று RSPCA தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More