செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா உலக அளவில் அதிகரித்துள்ள சைக்கிள்களுக்கான தேவை.

உலக அளவில் அதிகரித்துள்ள சைக்கிள்களுக்கான தேவை.

1 minutes read

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் கொரோனா பெருந்தொற்றால், உலக அளவில் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 1970-ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, கடந்த 2 மாதங்களில் சைக்கிள் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டன், பிலிப்பைன்ஸ், மணிலா மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் மக்கள், தேவைக்கு அதிகமாக சைக்கிள்களை வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது. பயணத்தின் போது தனிமனித இடைவெளியை பின்பற்றவும், வீடுகளிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்ளவும், ஊரடங்கால் வீட்டில் அடைபட்டுள்ள குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் சைக்கிள்கள் பயன்படுவதால் இவற்றின் தேவை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More