செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தை விடாது துரத்தும் கொரோனா!!

தமிழகத்தை விடாது துரத்தும் கொரோனா!!

1 minutes read

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 549 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை, மாலையில் விவரங்களை வெளியிட்டது. இதன்படி, இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 4 ஆயிரத்து 549 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 69 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 236ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 45 ஆயிரத்து 888ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 17 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒரே நாளில் 5 ஆயிரத்து 100 பேருக்கு மேல் குணம் அடைந்ததால், கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More