செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் சீனா!

ஈழத் தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் சீனா!

1 minutes read

இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹொங் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

மீனவர்களுக்கு 75 இலட்சம் ரூபாய்க்கும் கூடுதலான உதவிகளை வழங்கியுள்ளார். இலங்கை தமிழர்களின் அழிப்புப் போருக்கு அனைத்து வகைகளிலும் சீன அரசு அரசுதான் உதவியது.

இலங்கை தமிழர்கள் மத்தியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்தி இலங்கையின் வடக்கு பகுதியிலும் கால் பதிக்க வேண்டும். அதன் வாயிலாக இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதே சீனாவின் நோக்கம். ஆகவே வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More