மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குப் புதிய பொதுச்செயலாளரை விரைவில் நியமிக்குமாறு வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, கூட்டணியின் அரசியல் உயர்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளராகச் செயற்பட்ட சந்திரா சாப்டர், தனது பதவியை அண்மையில் இராஜிநாமா செய்தார்.
எனினும், புதிய பொதுச்செயலாளர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஸ்தாபக பொதுச்செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் லோரன்ஸ் செயற்பட்டார்.
எனவே, புதிய பொதுச்செயலாளர் பதவியை மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரனுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே புதிய பொதுச்செயலாளரை நியமிக்குமாறு மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.