செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் 4 சிசுக்கள் சாவு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் 4 சிசுக்கள் சாவு!

1 minutes read

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு சிசு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரசவத்துக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற தாய்மார்களில் கடந்த வாரம் மாத்திரம் பிறப்பின் போது நான்கு தாய்மார்களின் சிசுக்கள் இறந்துள்ளன. அத்தோடு தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எழுத்து மூலம் மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளதோடு, மருத்துவர்களின் அக்கறையின்மை மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சைகளை வழங்காதுவிட்டமையே இந்தச் சம்பவங்களுக்கான காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மருத்துவக் காரணங்களால்தான் தங்களது குழந்தைகள் இறந்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நான்கு குழந்தைகள் இறந்த தருணங்களிலும், பிரசவத் தாயாரது கருப்பை அகற்றப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஒரு குறித்த பயிற்சி மகப்பேற்றியல் மருத்துவ நிபுணரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்த ஆரம்பப் புலன் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More