செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 1700 ரூபா சம்பள விவகாரம் | வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு

1700 ரூபா சம்பள விவகாரம் | வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு

0 minutes read

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவை இன்று வியாழக்கிழமை (04) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும், மே 21, 2024 திகதியிடப்பட்ட, 2385/14 எனும் இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

குறித்த அதி விசேட அறிவித்தலுக்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளம் ரூ. 1,350 ஆகவும் உற்பத்தித்திறன் அடிப்படையில் நாளாந்த விசேட கொடுப்பனவு ரூ. 350 ஆகவும் என, மொத்த நாளாந்த சம்பளம் ரூ. 1,700 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் நாளாந்த வரவு செலவு சலுகைக் கொடுப்பனவும் உள்ளடக்கப்படுவதோடு, ஊ.சே.நி. உள்ளிட்ட கொடுப்பனவுகளை செலுத்துவதில் இந்த தொகை (ரூ. 1,350) கருத்தில் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More