செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 2,70,000 யூரோ தொகைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்

2,70,000 யூரோ தொகைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்

1 minutes read

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் ஹீரோ, 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்.

தற்போது, தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஆஸ்திரியாவில் மாசுபாடுக்கு எதிரான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிக்க சென்றார்.

பயணத்தின் போது, தென் கிழக்கு ஜெர்மனியின் மியூனிச்விமான நிலையத்தில் அவரது உடைமைகளில், விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Audemars Piguet எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம், சுமார் 26,000 யூரோ மதிப்புடையது.

ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர்.

அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஆஸ்திரியாவில் Stanglwirt Resort எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் ஏலம் நடைபெற்றது.

இதில், அர்னால்டின் கைக்கடிகாரம் சுமார் 2,70,000 யூரோ தொகைக்கு ஏலம் போனது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More