தனது மூன்றாவது ஹிந்தி படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும் என நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுவரை அவர் நடித்த இரண்டு ஹிந்தி படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளாதால், அவருடைய மூன்றாவது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது மூன்றாவது படம் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அவரின் முதல் ஹிந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.
இது பற்றி அவர் கூறும் போது இதுவரை ”நான் நடித்ததிலேயே இந்த படம் தான் மிக அழுத்தமான காதல் கதையாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும். ஒரு நடிகராக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.