விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். இது இவர் இசையமைக்கும் 50-வது படமாகும். அட்லி இயக்கத்தில் வெளியான ‘ராஜாராணி’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
அதுபோல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இடம் பெறும் பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்று தீவிரமாக இசையமைக்க தொடங்கியுள்ளார். இதில் ஒரு குத்துப்பாடல் இடம் பெற இருக்கிறதாம். அந்த குத்துப்பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத வகையில் உலக லோக்கல் தர டிக்கெட் பாடலாக இருக்கும் என்றும், இப்பாடல் ரசிகர்கள் எல்லாருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும் என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் இந்தப் பாடலுக்கு விஜய்யின் நடனத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்ததும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.