செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘மெளன ராகம்’ பட ‘சந்திரமெளலி’ கதாபாத்திர நடிகர் சங்கரன் காலமானார்

‘மெளன ராகம்’ பட ‘சந்திரமெளலி’ கதாபாத்திர நடிகர் சங்கரன் காலமானார்

0 minutes read

மணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி நடித்த ‘மெளன ராகம்’ படத்தில் பிரபலமான ‘சந்திரமெளலி’ கதாபாத்திரத்தில் நடித்த ரா.சங்கரன் இன்று (14) உடல்நலக் குறைவினால் தனது 92வது வயதில் காலமானார்.

இவர் ‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’ என மேலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு, ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ முதலிய படங்களையும் இயக்கியுள்ளார்.

இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

இந்நிலையில், சங்கரனின் மறைவு குறித்து திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா,

“எனது ஆசிரியரான இயக்குநர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More