செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தூய்மை பணியாளர்களின் உணர்வெழுச்சியை பேசும் ”நாற்கர போர்’ பட டீசர்

தூய்மை பணியாளர்களின் உணர்வெழுச்சியை பேசும் ”நாற்கர போர்’ பட டீசர்

1 minutes read

நடிகை அபர்னதி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நாற்கர போர்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர்  ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாற்கர போர்’ எனும் திரைப்படத்தில் அபர்னதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ரவி மற்றும் ஆர். எஸ். ஞானசேகர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் அண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக பேசும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி 6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரின் தொடக்கத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் பொன்மொழிகள் இடம் பிடித்திருப்பதுடன் தூய்மை பணியாளர்களின் நாளாந்த சாகச வாழ்வியலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தூய்மை பணியாளர்கள் சமூகத்தில் மேல் நிலைக்கு வருவதற்கு தடையாக இருக்கும் நுட்பமான விடயங்களை உரத்து பேசியிருக்கும் காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More