செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ஏழுகாய் குழம்பு!

ஏழுகாய் குழம்பு!

1 minutes read

தேவையானவை :
பரங்கிக்காய், வாழைக்காய்,
பூசணிக்காய்,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
அவரைக்காய்,
சேனைக் கிழங்கு,
கொத்தவரங்காய் – 2 கப் (அனைத்தும் சேர்த்து),
திக்கான புளிக்கரைசல்- 1 கப்,
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு ஏற்ப.

வறுத்து அரைப்பதற்கு :
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – காரத்திற்கு ஏற்ப,
பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம்- 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ¼ கப்,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க :
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை- 10 இதழ்கள்,
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வெறும் வாணலியில் முதலில் அரிசி வறுத்துப் பிறகு எள் வறுத்து இரண்டையும் தனியே வைக்கவும். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பருப்புகள், மிளகாய், பெருங்காயம், தேங்காய்த் துருவல் வறுக்கவும். இத்துடன் வறுத்த அரிசி, எள் சேர்த்து மைய அரைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வேகவிடவும். காய்கள் அரைவேக்காடு வெந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மேலும் ¼ கப் நீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும் தாளித்து இறக்கவும். திருவாதிரை குழம்பு தயார். களி, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நன்றி-தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.