Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கர்ப்பிணிக்கு உண்டாகும் வாயு பிரச்சனையை தீர்க்கும் எளிமையான வீட்டு வைத்தியம்!

கர்ப்பிணிக்கு உண்டாகும் வாயு பிரச்சனையை தீர்க்கும் எளிமையான வீட்டு வைத்தியம்!

4 minutes read

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் வாயு பிரச்சனையும் ஒன்று. கர்ப்பகாலத்தில் உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. கர்ப்ப காலத்தில் உடலில் புரெஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் சுரப்பதால் அவை வாயுவை உண்டாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகிறது. புரொஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் உடல் தசைகளை தளர்த்த கூடியது. இது குடலின் தசைகளை மெதுவாக இயக்கி செரிமானத்தை தாமதமாக்கும் போது வாயுவை உண்டாக்குகிறது.

மேலும் கர்ப்பத்தின் போது கர்ப்பப்பை அழுத்தத்தாலும் செரிமானம் குறைந்து அதிக வாயுவை உண்டாக்குகிறது. மேலும் உணவுகளும் கூட சமயங்களில் வாயுவை உண்டாக்கிவிடுகிறது. வாயுவை அலட்சியம் செய்யும் போது அது மலச்சிக்கலை உண்டாக்கிவிடக்கூடும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் இதற்கு சிறந்த வீட்டு வைத்தியங்களும் உண்டு. எப்படி வாயுவை தவிர்ப்பது அல்லது குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.

​திரவ ஆகாரங்கள்

கர்ப்பகாலத்தில் உடலில் நீரிழிப்பு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க அதிக அளவு நீர்குடிப்பதால் கிடைக்கும் நன்மையில் வாயு நீக்கும் மருத்துவமும் ஒன்று.தினமும் 8 முதல் 12 டம்ளர் வரை நீர் குடிப்பதை பின்பற்றுங்கள். தாகம் இல்லையென்று. அல்லது தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்று தவிர்க்காமல் போதுமான நீர் அவசியம்.

நீரோடு பழச்சாறுகளும் எடுத்துகொள்ளலாம். அதே நேரம் எடுத்துகொள்ளும் பழச்சாறுகள் வாயு வீக்கத்தை உண்டாக்கமால் இருக்க வேண்டும். இல்லையெனில் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கி இரிடபிள் டவுண்ட் சிண்ட்ரோம். (irritable bowel syndrome (IBS)) உண்டாக்கிவிடும்.

பழச்சாறுகளில் ஆரஞ்சு, குருதி நெல்லி சாறுகள் உதவும். இவை செரிமானத்தை எளிதாக்க கூடியவை.

குறிப்பு: திரவ ஆகாரங்கள் என்று கார்பன் டை ஆக்ஸைடு பானங்கள் எடுத்துகொள்வது வாயுவை அதிகரிக்க கூடும்.

​நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

வாயுவை அதிகரிக்கும் உணவுகள் மிக விரைவாக மலச்சிக்கலை உண்டாக்கிவிடவும் செய்யும். அதே நேரம் வாயுவை தவிர்க்கும் உணவுகள் மலச்சிக்கலை கட்டுப்படுத்தவும் செய்யும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் பொதுவானது என்றாலும் இதை உணவு முறை, வாழ்க்கை முறையால் கட்டுப்படுத்திவிட முடியும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் குடல் இயக்கத்துக்கு உதவும். இவை போதுமான நீரை குடலுக்குள் கொண்டு வர உதவுகிறது. மலத்தை மென்மையாக்கி எளிதாக வெளியேற உதவுகிறது. கர்ப்பிணி தினமும் 25 முதல் 30 கிராம் வரையான நார்ச்சத்து நிறைந்த உணவை சேர்ப்பது அவசியம். உணவில் முழு தானியங்கள், பழங்கள் ( வாழைப்பழம், அத்திப்பழம், கொடி முந்திரி,ஆப்பிள்) காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

​உடல் உழைப்புக்கு மாறுங்கள்

கர்ப்பகாலம் என்பது ஓய்வுக்காலமாக பல கர்ப்பிணிகள் நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு கடுமையான உழைப்பை தரகூடாது. கர்ப்பிணி பெண்கள் வழக்கமான வேலைசெய்யலாம். உடற்பயிற்சியை அன்றாட பணிகளில் ஒன்றாக மேற்கொள்லலாம். ஜிம்மிற்கு சென்று உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. சாதாரணமான எளிமையான நடைபயிற்சி கூட போதுமானது.

தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தாலே போதுமானது. இது உடல் ஆரோக்கியத்தையும் மனதை இலகுவாகவும் வைத்திருக்கும். கூடுதலாக மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க உதவும். செரிமான பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று சுயமாக செய்யாமல் கர்ப்பிணி பெண் தன்னுடைய உடல் ஆரோக்கியம் பொறுத்து மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். அணியும் ஆடைவகைகளும் இறுக்கமாக இருக்ககூடாது. அழுத்தமான வயிற்றை இறுக்கும் ஆடைகள் வாயுவை அதிகரிக்கும்.

​வாயு உணவை தவிர்க்க வேண்டும்

உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதால் எல்லா வகையான உணவையும் சேர்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். வாயு அறிகுறிகளை உணரும் போது அல்லது அதற்கு முன்பு உணவு குறித்தும் அக்கறை கொள்ள வேண்டும். இதனால் வாயு பிரச்சனையும், மலச்சிக்கலும் இல்லாமல் போகலாம்.

வாயுவை உண்டாக்கும் முட்டைகோஸ், ப்ரக்கோலி, கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை வாயுவை அதிகரிக்கும் உணவுகள் என்பதால் அளவாக எடுத்துகொள்ளலாம். கர்ப்பகாலத்தில் சில பெண்கள் ஐபிஎஸ் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அதனால் வாயுவால் அவதிப்படும் பெண்கள் அறிகுறிகள் தெரியும் போதே தவிர்க்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ஆழமான மூச்சு அவசியம்

மூச்சுக்கும் வாயுவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். வயிறு வீக்கம், வாயு வீக்கம் போன்றவற்றை வயிற்றுக்குள் செல்லும் காற்று அதிகரித்துவிடக்கூடும். மூச்சை கவனித்து ஆழமாக விடும் பயிற்சி உண்மையில் வாயுவுக்கும் நன்மை செய்யும். மேலும் ஆழமான மூச்சு மனதுக்குள் அமைதியை உண்டு செய்யும். கர்ப்பிணிகள் கவலை கொள்ள கூடாது. மனதை அமைதியாக வைத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.முடிந்தவரை மன அழுத்தம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்துகொள்வது கூட இதை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

​தீவிரமாகும் போது

வாயு பிரச்சனை இருக்கும் போது அதை சாதாரணமாக நினைக்க கூடாது. அவை மேலும் தீவிரமாகாமல் இருக்க உணவுபழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளில் அடிக்கடி வாயு வெளியேறுவதும் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் கடுமையான வயிறு வலி இருந்தால் அது ஒருவாரத்துக்கு மேலாக கடுமையான வயிறுவலியும் கூடவே மலச்சிக்கலும் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டியதல்ல. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பகாலம் முழுவதும் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி : தமிழ் சமயம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More