*தேடிப் பாருங்கள்
தேவலோக தேவதைகள்
தெருக்களில் நடந்து வருவார்கள்….!
* காதல் விளையாட்டை
கண்களால் சொல்லி
இதயத்தில் நுழைவார்கள்….
* இதழோரம் பரு ஒன்று
இராக்கனவில் தூது வந்து
பருவத்தை பாழ் படுத்தும்…
* தலையில் சூடிய
ஒற்றை ரோஜாவின் ஓரிதழ்
சமரசம் செய்து சாமரம் வீசும்..
* கருங்கூந்தல் வாசம்
காற்றோடு கலந்து வந்து
காதோடு கதை பேசும்….
* இதழ்களால் பேசிய
மௌனக்கவிதை மனசுக்குள்
மத்தளம் கொட்டும்….
* இடுப்பின் மடிப்பு
இளமைக்கடலில்
துடுப்பு இல்லாமல்
துள்ளல் போடும்….
* நெற்றியில் ஒட்டிய பொட்டு
நெஞ்சுக்குள் நித்தம் வந்து
நீலாம்பரி பாடும்…..
* சேலை மூடிய சோலைப் பூ
இரவு வேளையில்
இன்ப உறவுக்கு அழைக்கும்..
* மொத்த அழகையும்
முத்தக் குத்தகையில்
மூச்சு உள்ள வரை
சுவைக்கும்……
* தேவைப் படுவோர்
தேடிப் பாருங்கள்
தேவலோக தேவதைகள்
தெருக்களில் நடந்து
வருவார்கள்……!!!
.
ஆக்கம் :
கவிஞர் எல். இரவி
செ.புதூர்.612203
செல்.9952720995
.
நன்றி : தேஞ்சிட்டு இணையஇதழ்