Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தேடிப் பாருங்கள்.. | கவிதை | கவிஞர் எல். இரவி

தேடிப் பாருங்கள்.. | கவிதை | கவிஞர் எல். இரவி

3 minutes read

*தேடிப் பாருங்கள்

தேவலோக தேவதைகள்

தெருக்களில் நடந்து வருவார்கள்….!

* காதல் விளையாட்டை

கண்களால் சொல்லி

இதயத்தில் நுழைவார்கள்….

* இதழோரம் பரு ஒன்று

  இராக்கனவில் தூது வந்து

  பருவத்தை பாழ் படுத்தும்…

*  தலையில் சூடிய 

  ஒற்றை ரோஜாவின் ஓரிதழ்

  சமரசம் செய்து சாமரம் வீசும்..

* கருங்கூந்தல் வாசம்

  காற்றோடு கலந்து வந்து

  காதோடு கதை பேசும்….

*  இதழ்களால் பேசிய

  மௌனக்கவிதை மனசுக்குள்

  மத்தளம் கொட்டும்….

*  இடுப்பின் மடிப்பு

  இளமைக்கடலில்

   துடுப்பு இல்லாமல்

  துள்ளல் போடும்….

*  நெற்றியில் ஒட்டிய பொட்டு

  நெஞ்சுக்குள் நித்தம் வந்து

  நீலாம்பரி பாடும்…..

*  சேலை மூடிய சோலைப் பூ

    இரவு வேளையில்

    இன்ப உறவுக்கு அழைக்கும்..

*  மொத்த அழகையும்

    முத்தக் குத்தகையில்

     மூச்சு உள்ள வரை

     சுவைக்கும்……

*  தேவைப் படுவோர்

   தேடிப் பாருங்கள்

   தேவலோக தேவதைகள்

   தெருக்களில் நடந்து

   வருவார்கள்……!!!

.

ஆக்கம் :

கவிஞர் எல். இரவி

செ.புதூர்.612203

செல்.9952720995

.

நன்றி : தேஞ்சிட்டு இணையஇதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More