Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பயங்கரவாதி நாவலுக்கு திருகோணமலையில் மக்கள் அளித்த வரவேற்பு

பயங்கரவாதி நாவலுக்கு திருகோணமலையில் மக்கள் அளித்த வரவேற்பு

3 minutes read

 

திருகோணமலை கலை இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனுசரனையில் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா மக்கள் நிறைந்த அரங்கில் கடந்த சனிக்கிழமை (17.02.2024) நடைபெற்றது.

திருகோணமலை நகரசபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. கவிஞர் தி. பவித்திரனின் ஒருங்கிணைப்பில் கனகசூரியம் யோகானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் வெளியீட்டுரையை நாடகக் கலைஞர் அ. சத்தியானந்தனும் விமர்சனவுரைகளை வ. முரளீதரனும் கி. அலெக்ஷனும் வழங்கினர். படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More