யுத்தம் இல்லாத உலகு வேண்டும்
எல்லா மனிதனுக்கும் உணவு வேண்டும்
மானிடம் பேசும் மொழிகள் வேண்டும்
மனிதமும் அறமும் வாழ வேண்டும்
மனிதனை மனிதன் மதித்திட வேண்டும்
மண்ணில் எப்பவும் அமைதி வேண்டும்
பறவையும் குயிலும் பாடிட வேண்டும்
நீதியும் நியாயமும் நிலைத்திட வேண்டும்
அமைதியாய் உலகு சுழலுதல் வேண்டும்
அன்பும் கருணையும் பேசுதல் வேண்டும்
வலிகள் கடந்த வாழ்வு வேண்டும்
நிலையாய் எங்கும் நின்மதி வேண்டும்
எல்லா இருளும் கடக்க வேண்டும்
எங்குமே சூரியன் உதித்திட வேண்டும்
வானமே இறங்கி பேசுதல் வேண்டும்
மழையாய் பூமி நனைந்திட வேண்டும்
உலகுக்கு என்றும் அமைதி வேண்டும்
உண்மைப் பொருளை உணருதல் வேண்டும்
அன்பே சிவம் என்று அறிதல் வேண்டும்
அதுவே அறமாய் உலகம் வேண்டும்.
பா.உதயன்