Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் செல்பிஷ் இராமாயணம் | வில்வரசன்

செல்பிஷ் இராமாயணம் | வில்வரசன்

0 minutes read

பேரூடலுக்குப் பின் சந்தித்துக்கொள்கையில்
இராமனின் கற்பை
நிரூபிக்கக் கட்டளையிடுகிறாள் சீதை

தடுமாறியபடியே
தன் கையிலிருக்கும்
செல்போனைக் கையளிக்கையில்
முத்தக்குறிகளை வாரியிறைத்து
வாட்ஸாப்பில் சிரிக்கிறாள்
சூர்ப்பனகை

நெடுநாளைக்கு முன்னர்
சபரியுடனான இரவுணவில்
சந்தோசமாய் கிளிக்கிய
செல்ஃபிப் புகைப்படம்
சிக்கிக்கொள்கிறது கலரியில்

தாரையின் புகைப்படமொன்றிற்கு
“வாவ், அற்புதமென்று ”
கமெண்டிட்ட கவிதையொன்று பேஸ்புக்கில் பல்லிளிக்கிறது

இத்தனைக்குப் பிறகும்
இன்னும் என் புகைப்படம்தானா?
உம் டிபி யில் இருக்கிறதென
செல்லமாய்
கடிந்துகொள்கிறாள் சீதா

வில்வரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More