முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அஞ்சலி
எங்கள் இசையுலகின் வயலின் கலைஞராக அனைத்து வகை இசை அரங்குகளை நிறைத்திருந்த ஜெயராமன் திடீர் மறைவு நெஞ்சுக்கு கனமானது; ஈடுசெய்யமுடியாதது. யாழ் பொது நூலகத்தில் பணியாற்றிய போதும் வயலினே அவர் வாழ்வாக விளங்கியது.
தந்தையார் நாச்சிமார் கோயிலடி மிருதங்கம் வி. அம்பலவாணர் மகனாக இசை ஞான சூழமைவில் வளர்ந்தவர் ஜெயராமன். மிக இளவயதிலிருந்தே வயலின் வித்துவான் எஸ். சர்வேஸ்வர சர்மாவிடம் முறைப்படி வயலின் இசைபயின்றவர். நிறைந்த கேள்வி ஞானம் கொண்டவர். .சுத்தமான வாசிப்பினடியாக சுருதி வேந்தன் என கொண்டாடப்பட்டவர்.
என்னுடைய ஆக்க இசை அரங்குகளில் அவரோடு இசைந்த பொழுதுகள் மறக்கமுடியாதவை. சிவபுராண ஒலிப்பதிவில் மோகன ராகத்தில் இருவரும் இரண்டறக்கலந்து நின்ற பொழுதின் பதிவுகள் என்றென்றும் ஓய்வதில்லை.